முல்லைத்தீவு மாவட்டத்தில் இழப்பீட்டுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் அவர்களுடைய தலைமையில் இடம்பெற்றது.
அந்த வகையில் நேற்று காலை 8 மணிக்கு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 16 பயனாளிகளுக்கான இழப்பீட்டு கொடுப்பனவு காசோலைகள் வழங்கப்பட்ட அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களுடைய 2021 ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 14 முன்பள்ளிகளுக்கான சமையல் உபகரணங்களும் பாடசாலை, முதியோர் இல்லங்களுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 22 பயனாளிகளுக்கான இழப்பீட்டு கொடுப்பனவு காசோலைகள் வழங்கப்பட்ட அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களுடைய 2021 ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 15 முன்பள்ளிகளுக்கான சமையல் உபகரணங்களும் ஆலயம், முதியோர் இல்லங்களுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 72 பயனாளிகளுக்கான இழப்பீட்டு கொடுப்பனவு காசோலைகள் வழங்கப்பட்ட அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களுடைய 2021 ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகள், ஆலயம், விளையாட்டு கழகங்கள், முதியோர் இல்லங்களுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து 12.30 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டதெரிவு செய்யப்பட்ட 80 பயனாளிகளுக்கான இழப்பீட்டு கொடுப்பனவு காசோலைகள் வழங்கப்பட்ட அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களுடைய 2021 ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகள், ஆலயம், விளையாட்டு கழகங்கள், முதியோர் இல்லங்களுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இறுதியாக 2.30 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 82 பயனாளிகளுக்கான இழப்பீட்டு கொடுப்பனவு காசோலைகள் வழங்கப்பட்ட அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களுடைய 2021 ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக தெரிவு செய்யப்பட்டமுன்பள்ளிகள், ஆலயம், விளையாட்டு கழகங்கள், முதியோர் இல்லங்களுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வுகளில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான் மற்றும் பிரதேச செயலகங்களின் உடைய ஊழியர்கள் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுடைய செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு